டிச.19 -ம் தேதி டெல்லியில் பேரணி நடத்த இருக்கும் வணிகர்கள்

வணிகர்களுக்கு எதிரான சட்ட விதிகளை திருத்தம் செய்ய வலியுறுத்தி வரும் 19-ம் தேதி டெல்லியில் மாபெரும் பேரணி நடைபெற இருப்பதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வட்டார சிறிய உணவுப் பொருள்கள் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் நலச் சங்க ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விக்ரமராஜா, எண்ணெய் நிறுவனங்களில் சுகாதார அதிகாரிகள் ஆய்வு செய்வதால் 60 சதவீத நோய்கள் குறைந்துவிடும் என்றார்.

இந்தநிலையில், வணிகர்களுக்கு எதிரான சட்ட விதிகளை திருத்தம் செய்ய வலியுறுத்தி வரும் 19-ம் தேதி டெல்லியில் நடைபெறும் என கூறிய அவர், இந்த பேரணியில் ஒரு லட்சம் வணிகர்கள் பங்கேற்க இருப்பதாக தெரிவித்தார்.

 

Exit mobile version