கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நிலவும் பனி மூட்டத்தை ரசிக்க, சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில், கடந்த சில தினங்களாக மாலை வேளைகளில் பனி மூட்டம் அதிகமாக காணப்படுகிறது. சாலையில் முன்னே செல்லும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு அதிகளவில் பனிமூட்டம் காணப்படுவதால், இதமான சூழல் நிலவி வருகிறது.

வார விடுமுறை நாட்கள் என்பதால், அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். நட்சத்திர ஏரி மற்றும் பல்வேறு சுற்றுலா தளங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

Exit mobile version