முதுமலை புலிகள் காப்பகத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

தொடர் விடுமுறையையொட்டி முதுமலை புலிகள் காப்பகத்திற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் முடிவந்ததை அடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டுத்தோறும் இவ்வாறு விடப்படும் விடுமுறைகளின்போது தங்களின் குழந்தைகளுடன் பெற்றோர்கள் மனதிற்கு நிம்மதி தரும் வகையில் சுற்றுலா தளங்களுக்கு செல்வது வழக்கம்.

இந்தநிலையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அங்கு நிலவும் இதமான குளிர் காற்றை அனுபவித்தவாறு யானை சவாரி உள்ளிட்ட சவாரிகளை மேற்கொள்ளுகின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்திருப்பதை தொடர்ந்து பாதுகாப்பு பணிகளை காவல் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version