உதகையில் குவியும் சுற்றுலா பயணிகள்

தீபாவளி மற்றும் தொடர் விடுமுறை காரணமாக உதகையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

உதகையில் தற்போது இரண்டாவது சீசன் தொடங்கிய நிலையில், தீபாவளி மற்றும் தொடர் விடுமுறை காரணமாக உதகையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது. கேரளா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர்.ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா மட்டுமின்றி சூட்டிங் மட்டம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

கடந்த பத்து நாட்களாக கனமழையின் காரணமாக வெறிச்சோடி காணப்பட்ட சுற்றுலா ஸ்தலங்கள் தற்போது தொடர் விடுமுறை காரணமாக களைகட்டியுள்ளது. விடுமுறையை குடும்பம் குடும்பமாக செல்ஃபி மற்றும் புகைபடம் எடுத்தும் மகிழ்ந்தனர். இதனால் சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Exit mobile version