சுற்றுலாப்பயணிகளை கவரும் – செயற்கை நீர் வீழ்ச்சி

கொடைக்கானலில் அமைந்துள்ள ரோஜா தோட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக, செயற்கை நீர் வீழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது.

இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானலில் உள்ள ரோஜா தோட்டத்தில் 15 ஆயிரம் செடிகள் நடப்பட்டு அவை பூத்துக் குலுங்குகின்றன. இவற்றை கண்டு களிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இந்தநிலையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் செயற்கை நீர் வீழ்ச்சி இங்கு அமைக்கப்பட்டுள்ளது. ரோஜா தோட்டத்தின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள நீர் வீழ்ச்சியை சுற்றுலாப் பயணிகள் ரசித்து செல்கின்றனர்.

Exit mobile version