அம்பாசமுத்திரம் அருகே அகத்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

விடுமுறையையொட்டி நெல்லை அம்பாசமுத்திரம் அருகே உள்ள அகத்தியர் அருவிக்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள அகத்தியர் அருவிக்கு தினந்தோறும் தூத்துக்குடி, சேலம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், விடுமுறையையொட்டி அகத்தியர் அருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அருவியில் போதிய அளவு தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து மகிழ்ந்தனர்.

Exit mobile version