திற்பரப்பு அருவியில் அலைமோதும் சுற்றுலாப்பயணிகள் கூட்டம்

விடுமுறை நாட்கள் என்பதால் கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

விடுமுறை நாள் என்பதால் தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தளங்களில் பொதுமக்கள் கூட்டமாகக் குவிந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் அதிகாலை முதலே சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்தனர். தமிழகம் மட்டுமன்றி கேரளாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். படகு சவாரி, சிறுவர் பூங்கா, நீச்சல் குளம், படகுத் துறை உள்ளிட்ட பகுதியிலும் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. நீர்வரத்து அதிகமாக உள்ளதாலும் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுவதாலும் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக குளித்துச் செல்கின்றனர்.

Exit mobile version