குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கன மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், குற்றாலம், செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது சபரிமலை சீசன் என்பதால் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் குற்றாலத்திற்கு வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.

Exit mobile version