உதகையில் இரண்டாம் கட்ட சீசன் துவக்கம் – சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்

உதகையில் இரண்டாம் கட்ட சீசன் துவங்கியுள்ள நிலையில் உதகை படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

கடந்த மாதம் நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் அனைத்து சுற்றுலா தலங்களும் வெறிச்சோடி காணப்பட்டு, சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருந்தது. இந்நிலையில், உதகையில் தற்போது இரண்டாம் கட்ட சீசன் துவங்கிய நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது. வார விடுமுறை தினமான இன்று உதகை படகு இல்லத்தில் வெளியூர் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. படகு சவாரி செய்தும், செல்ஃபி எடுத்தும் அவர்கள் மகிழ்ந்தனர்.

Exit mobile version