குற்றாலத்தில் குறந்த தண்னீரால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்ததால் செங்கோட்டை அருகேயுள்ள குண்டாறு அணைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

நெல்லை மாவட்டம் குற்றாலத்துக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகளில் வருகை தருகின்றனர். இந்நிலையில் குற்றாலத்துக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குறைந்த அளவே தண்ணீர் காணப்பட்டதால், குண்டாறு அணைக்கு மேலே உள்ள நெய்யருவியில் குளிக்க வந்தனர். நெய்யருவியிலும் குறைவான அளவு தண்ணீரே விழுந்ததால் சுற்றுலா பயணிகள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தாலும், விடுமுறை தினம் என்பதால், கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. 36 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் தற்போது 17 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version