குற்றாலத்தில் தண்ணீர் குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

தொடர் விடுமுறை காரணமாக நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் தண்ணீர் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர்.

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நிலவும் கடும் வறட்சி காரணமாக அனைத்து அருவிகளிலும் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் தொடர் விடுமுறை காரணமாக ஐந்தருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. ஆனால் ஐந்தருவியில் மூன்று கிளைகளில் மட்டும் சிறிதளவு தண்ணீர் வருவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் தண்ணீர் குறைந்த அளவே வருவதால் ஆண்களும் பெண்களும் ஒரே பகுதியில் நின்று குளிக்கும் சூழல் நிலவியது.

Exit mobile version