குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

குற்றால அருவிகளில் நீண்ட நாட்களுக்கு பிறகு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மூன்று நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று காலை முதல் குற்றாலம் மற்றும் ஐந்தருவியின் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version