விடுமுறையையொட்டி திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்

கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாளான இன்று கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

தொடர் மழை காரணமாக திற்பரப்பு அருவியில் மிதமாக தண்ணீர் வருகிறது. இதனால், தமிழகம் மட்டுமின்றி, கேரளாவில் இருந்து வந்துள்ள சுற்றுலாப் பயணிகளும் அருவியில் அதிக நேரம் குளிக்க ஆர்வம் காட்டுகின்றனர். நீச்சல் குளம் சிறியவர் பூங்கா, படகு சவாரி உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து இருப்பதால் வியாபாரிகளும் நல்ல லாபம் ஈட்டி வருகின்றனர்.

Exit mobile version