ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்

கோடை விடுமுறையை கழிக்க உதகை சென்றுள்ள சுற்றுலா பயணிகள், அங்குள்ள படகு குழாமில் உற்சாகமாக படகு சவாரி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்

கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் வார விடுமுறை நாட்களை கழிப்பதற்காக சுற்றுலா பயணிகள் உதகையில் முற்றுகையிட்டுள்ளனர். குறிப்பாக உதகை படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது. மிதிபடகு, துடுப்பு படகு மற்றும் மோட்டார் படகு போன்றவற்றில் பயணிக்க, சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். படகு சவாரியின் போது, சுற்றுலா பயணிகள் இயற்கை எழில் கொஞ்சும் அடர்ந்த மரங்களையும், மான் பூங்காவில் உள்ள கடமான்களையும், ஏரி கரையோரம் மரங்களில் அமர்ந்திருந்து ஓய்வெடுக்கும் புள்ளி மூக்கு வாத்துகளையும் கண்டு ரசிக்கின்றனர்.

Exit mobile version