உதகையில் கோடை சீசன் துவங்கியுள்ளதால் குவியும் சுற்றுலா பயணிகள்

உதகையில் கோடை சீசன் துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் உதகையில், தற்போது கோடை சீசன் துவங்கியுள்ளதால், முக்கிய சுற்றுலா ஸ்தலங்களில் ஒன்றான தொட்டபெட்டா சிகரத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. கோடை வெப்பத்தில் இருந்து காத்துக் கொள்வதற்காக, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் உதகையில் குவியத் தொடங்கியுள்ளனர்.

உதகையில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதமான சூழல் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version