குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது. இதனால், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனிடையே நேற்று இரவு நெல்லை மாவட்டத்தை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இரவு முழுவதும் பெய்த மழை காரணமாக இன்று காலை குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது.

குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவி போன்ற அருவிகளில் அளவுக்கு அதிகமான தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version