பைகாரா படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

கோடை விடுமுறை என்பதால் உதகை பைகாரா படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் உதகையில் தற்போது கோடை சீசன் துவங்கியுள்ளது. இதனால் உள்ளுர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். உதகை தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா சிகரம் மற்றும் ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் அதிகமாக குவிந்துள்ளனர்.

இந்த நிலையில் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் பைகாரா படகு இல்லத்தில், சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. மேலும் படகு சவாரியின் போது குளிர்ச்சியான காற்று வீசுவதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

Exit mobile version