அகஸ்தியர் அருவியில் சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பு

பாபநாசம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

நெல்லை மாவட்டம் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் கோடை விடுமுறை முடிந்தும், ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக, தமிழகம் முழுவதும் தற்போது வறட்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் தற்போது கேரளாவில் பருவ மழைக்கான அறிகுறிகள் தொடங்கியதால் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள அகஸ்தியர் அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Exit mobile version