குற்றாலத்தில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகளின் வருகை

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்ததை அடுத்து ஆண்கள் மற்றும் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 5 நாட்களுக்கு முன்பாக கனமழை பெய்தது இதனால் குற்றாலம் மற்றும் ஐந்தருவி ஆகிய அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. குற்றாலத்தில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வருகை தந்தனர். இரண்டு நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்யாததால் குற்றாலத்தில் தண்ணீர் வரத்து குறைய தொடங்கியது. சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருந்த காரணத்தினால் மெயின் அருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் வரிசையில் நின்று குளிக்க காவல்துறையினர் அனுமதி அளித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

Exit mobile version