விக்கிரவாண்டி, நாங்குநேரியில் நாளை வாக்கு எண்ணிக்கை

இடைத்தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜ் நகர் தொகுதிகளில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன.

தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதியிலும் கடந்த 21ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தம் 84.41 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இது சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை விட 3 சதவீதம் அதிகம்.

வாக்குப்பதிவிற்கு பிறகு இயந்திரங்கள் அனைத்தும் சீலிடப்பட்டு, வாக்கு எண்ணும் மையமான விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு தொடங்கி, 26 சுற்றுகளாக வாக்கு எண்ணப்படுகிறது.

Exit mobile version