தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு

தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.

தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டி வருகிறது. இதேபோல், யார்கோல் பகுதியில் 50 மீட்டர் உயரத்தில் தடுப்பணை அணை கட்டி வருகிறது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

உச்ச நீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தீர்ப்பு நாளை வெளியாகும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version