பி.எட். படிப்புக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நாளை கடைசி நாள்

பி.எட். படிப்புக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நாளை கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 7 அரசு பி.எட் கல்லூரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் பி.எட் கல்லூரிகளில் உள்ள இரண்டாயிரத்து நாற்பது பி.எட்.இடங்களுக்கான சேர்க்கை ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளது. சென்னையிலுள்ள வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், இந்த இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வை நேரடி ஒற்றைச் சாளர முறையில் நடத்த உள்ளது. அதன்படி, கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் கடந்த 19 ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில், விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்றும், மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க நாளை கடைசி நாள் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Exit mobile version