நாளை இமானுவேல் சேகரனின் 62வது குருபூஜை விழா

இமானுவேல் சேகரனின் 62 வது குருபூஜையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

இமானுவேல் சேகரனின் 62 குருபூஜை நாளை அனுசரிக்கப்படுகிறது. இதற்காக ராமநாதபுர மாவட்டத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்க மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குருபூஜைக்கு வாகனங்களில் செல்வோர் அந்தந்த பகுதி காவல்துறைகளில் அனுமதி பெற வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இமானுவேல் குருபூஜையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்து 500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Exit mobile version