சிபிஐக்கு புதிய இயக்குநரை தேர்வு செய்ய நாளை மீண்டும் உயர்மட்டக்குழு கூட்டம்

சிபிஐக்கு புதிய இயக்குநரை தேர்வு செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மீண்டும் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

சிபிஐ இயக்குநராக இருந்த அலோக வர்மா நீக்கப்பட்ட பிறகு இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சிபிஐக்கு புதிய இயக்குநரை நியமிப்பதற்காக கடந்த 24 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான உயர்மட்டக்குழு கூடியது. இந்தக் கூட்டத்தில், சிபிஐ இயக்குநர் குறித்த எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில், நாளை உயர்மட்டக்குழு கூட்டம் கூடும் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். மாலை 6 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version