உள்ளூர் வாகனத்திற்கு கட்டணம் செலுத்த மறுப்பு – தாக்குதலில் ஈடுபட்ட சுங்கச்சாவடி ஊழியர்

மதுரையில் உள்ளூர் வாகனத்திற்கு கட்டணம் செலுத்த மறுத்த வாகன உரிமையாளரை, சுங்கச்சாவடி ஊழியர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருமங்கலத்தை சேர்ந்த பத்மநாபன் குடும்பத்துடன் காரில் கப்பலூர் சுங்கச்சாவடியை கடந்துள்ளார். அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் சுங்க கட்டணம் செலுத்தும் படி கூறியதாக தெரிகிறது. உள்ளூர் வாகனம் என்பதால் கட்டணம் செலுத்த பத்மநாபன் மறுத்துள்ளார். இதனால் பத்மநாபனுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிப்போக, சுங்கச்சாவடி ஊழியர்கள் பத்மநாபனை தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் காயமடைந்த பத்மநாபன் சுங்கச்சாவடி மையத்தின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினார்.

Exit mobile version