ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படவுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த திங்களன்று நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து, வேட்புமனுக்கள் செவ்வாய்க்கிழமை பரிசீலனை செய்யப்பட்ட நிலையில்,  ஒரு சில வேட்பு மனுக்களைத் தவிர மற்ற மனுக்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதனையடுத்து, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட உள்ளன.

இந்தப் பட்டியலானது, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அலுவலகங்களில் ஒட்டப்படும். அதன் பின், பதிவு செய்யப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு பொதுச் சின்னமும், சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்களும் ஒதுக்கப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்று மாலை 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகவுள்ளது.

Exit mobile version