இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்?

நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழையும், கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் கன மழையும் பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி, திருப்பூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும், ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version