சபரிமலை கர்மா சமிதி என்ற அமைப்பு சார்பில் கேரளாவில் இன்று முழு அடைப்பு

சபரிமலை கர்மா சமிதி என்ற அமைப்பு சார்பில் கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே பம்பையில் இருந்து சபரிமலைக்குச் செல்ல முயன்ற சசிகலா என்ற பெண், மரக்கூடம் என்ற இடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட சசிகலாவை போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சபரிமலை கர்மா சமிதி என்ற அமைப்பு சார்பில் கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்திற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகளும், இந்து அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. முழு அடைப்பு காரணமாக கேரளா செல்லும் பேருந்துகள் தமிழக எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றனர்.

 

Exit mobile version