இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

மும்பை பங்குச்சந்தை பங்கு விலைக் குறியீடு சென்செக்ஸ் இன்று ஒரே நாளில் 530 புள்ளிகள் உயர்ந்து 40 ஆயிரத்து 889 என்கிற புதிய உச்சத்தைத் தொட்டது.

மும்பை பங்குச்சந்தை பங்கு விலைக் குறியீடு இன்று தொடக்கம் முதலே ஏறுமுகத்தில் இருந்தது. இன்றைய வணிகநேர முடிவில் 530 புள்ளிகள் அதிகரித்து 40 ஆயிரத்து 889 ஆக இருந்தது. இது இதுவரை இல்லாத புதிய உச்சமாகும். இதேபோல் தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி 165 புள்ளிகள் உயர்ந்து 12 ஆயிரத்து 79 ஆக இருந்தது. உலோகத் தொழில் நிறுவனங்கள், வங்கிகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குகள் பெருமளவில் கைமாறியதால் அவற்றின் பங்குவிலை கணிசமாக உயர்ந்தது. பார்தி ஏர்டெல், இன்ப்ராடெல், டாட்டா ஸ்டீல், இந்துஸ்தான் அலுமினியம் கம்பெனி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.

Exit mobile version