சேலம் நாகியம்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு

சேலம் நாகியம்பட்டியில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஆய்வு செய்தார்.

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இன்று நடக்கும், ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக ஆத்தூர், கங்கவல்லி, தம்மம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து காளைகள் அழைத்து வரப்படுகின்றன. ஏராளமான மாடுபிடி வீரர்களும் கலந்துகொள்ள உள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஆய்வு செய்தார். போட்டி ஏற்பாட்டாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனைகளையும் வழங்கினார்.

 

Exit mobile version