திருப்பதியில்பிரம்மோற்சவத்தின் 8ஆம் நாளான இன்று தேரோட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் 8ஆம் நாளான இன்று தேரோட்டம் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த மாதம் 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நாள்தோறும் காலையிலும் இரவிலும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் மலையப்ப சுவாமி மாட வீதிகளில் பவனி வந்து அருள் பாலித்தார். இந்நிலையில் பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாளான இன்று காலை தேர் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது. தேர்த் திருவிழாவைக் காண்பதற்காகவும், திருத்தேரை வடம் பிடித்து இழுக்கவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திருப்பதியில் திரண்டுள்ளனர்.

Exit mobile version