இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது

உள்ளாட்சித் தேர்தல் வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது.

அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாலை 5 மணிக்கு, மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும், எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு இன்று முதல் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version