வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று சிறப்பு முகாம்

அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்கள் நடந்து வருகின்றன. 2019 ஜனவரி 1ம் தேதியுடன் 18 வயதை அடைவோர், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.மேலும் இதுதவிர வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களையும் மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே இது தொடர்பாக 3 கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற்றது . இந்த நிலையில் இன்று நான்காவது கட்டமாக, தமிழகம் முழுவதும் 67 ஆயிரத்து 654 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொள்ள பொதுமக்களை தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Exit mobile version