இன்று 9 தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம்

5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் 9 தொழில் நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று கையெழுத்தாகிறது.

3 அமெரிக்க நிறுவனங்களுடன் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் திட்டங்களை, சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கவுள்ளார். மேலும், 60 கோடி ரூபாய் மதிப்பில் 3 உயர்நிலை திறன் மேம்பாட்டு மையங்களை தொடங்கி வைத்தல், 28 கோடியே 43 லட்ச ரூபாய் மதிப்பில் 2 புதிய தொழில் பயிற்சி நிலையங்களை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தமும் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தாக உள்ளது. திறன் மேம்பாட்டு ஆய்வறிக்கை மற்றும் மாவட்ட திறன் மேம்பாட்டு திட்டங்களை வெளியிடுதல், டி.ஆர்.ஓ மற்றும் ஐஐடி சென்னை நிறுவனங்களுடன் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் பெருவழித் திட்டத்திற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இந்த நிகழ்வில் கையெழுத்தாகின்றன. தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் புதிய பெயரை வெளியிடுவதோடு, தொழில் நிறுவனங்களுக்கான குறைதீர்க்க உதவும் தொழில் நண்பன் என்ற இணையதளத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

Exit mobile version