News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home Top10

"நீரலையில் நீந்தவைத்த ஆழிப்பேரலை" – 10,000 உயிர்களை பலி கொண்ட நாள்

Web Team by Web Team
December 26, 2021
in Top10, TopNews, இந்தியா, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
"நீரலையில் நீந்தவைத்த ஆழிப்பேரலை" – 10,000 உயிர்களை பலி கொண்ட நாள்
Share on FacebookShare on Twitter

உலக அளவில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இன்றும் பேசப்படும் 2004 ஆம் ஆண்டு, சுனாமியின் நினைவு தினம் இன்று.. 

இந்தியப் பெருங்கடல் அன்று காலை ஆர்ப்பரிக்கும் என்று தெரியாமல்தான் கிழக்கில் சூரியன் உதித்தது. 2004 ஆம் ஆண்டின் டிசம்பர் 26 ஆம் தேதி, பலருக்கும் மறக்க முடியாத நாளாகும் என்பதும் தெரியாமல்தான், நாட்குறிப்பு கிழிக்கப்பட்டது.

எப்போதும், எல்லாவற்றை வாங்கிக் கொள்ளும் பொறுமைசாலியாகவே பார்க்கப்பட்ட வங்காள விரிகுடா, கோபம் கொண்டு கொந்தளித்து தண்ணீரை நிலப்பரப்புக்குள் உமிழ்ந்து, உயிர்களைக் கொண்டு வெறியாறியது.

2004 ஆம் ஆண்டு, இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் உள்ள கடல்பகுதியில், வரலாறு காணாத நில நடுக்கம் பதிவானது. அதன் அதிர்வலையை ரிக்டர் புள்ளிகளும் நடுக்கத்துடன் தான் பதிவு செய்து வைத்துள்ளது.

image

கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலத்தின் அதிர்வு, கடலுக்கு மேல் பேரலையாகக் கிளம்பியது. சுமார் 100 அடிக்கு அலை எழுந்த கடலின், கோரத் தாண்டவத்தை நிலம் இன்னும் நினைவில் கொண்டுள்ளது.

குறிப்பாக தமிழ்நாட்டில், ஊருக்குள் கடலலை வந்துபோன பின்பும், மக்கள் கண்ணீரின் வெள்ளம் பல நாட்கள் தெருக்களில் சலசலத்தது. அது ஒரு ஞாயிற்றுக் கிழமை ஆக, கடற்கரைக்கு வாக்கிங் போனவர்முதல், வாழ்வுக்குப் போனவர்கள் வரை அனைவரையும் வாரிக்கொண்டு போனது கடல்.

குமரி, நாகை, வேளாங்கண்ணி, கடலூர், புதுவை அழியா ஆழ்துயரை விதைத்தது கடல். தமிழகத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

கோடிக்கணக்கான பொருள்கள், இயற்கை வளங்கள், மரங்கள், கால்நடைகள் என இழப்பின் கணக்குகளை சொல்ல காகிதங்கள் கனக்கும். அந்தப் பேரலை நாளின் நினைவு வந்தால், இன்றும் நீரலையில் நனையாத கண்கள் கிடையாது.

ஆழிப் பேரலை எட்டிப் பார்த்து 16 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இயற்கையைக் காக்க வேண்டிய அவசியத்தை கடல் சொன்ன பாடமாய்க் கற்று கொண்ட நாம் எச்சரிக்கையோடு இருக்கிறோம்! நினைவில் சுமந்தே கடக்கிறோம்! வாழ்கிறோம்!

Tags: Dec26Memorial daynewsjtsunami
Previous Post

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் அடித்துக் கொலை

Next Post

"பிரபஞ்ச இருளின் ரகசியத்தை அறிய ஆவல்" – விண்ணில் பாய்ந்தது ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ்

Related Posts

rajpath road to karthavya road
இந்தியா

காலனித்துவத்தை குறிக்கும் வகையிலுள்ள ’ராஜ்பாத் சாலை’ பெயர், ’கர்த்தவ்யா சாலை’ என மாற்றம்!

September 6, 2022
’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!
அரசியல்

’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

September 5, 2022
Dead woman lying on the floor under white cloth with focus on hand
இந்தியா

ஆண் நண்பர்களுடன் பேசியதால் 5-ஆம் வகுப்பு மாணவி கொலை! பெற்றோர் அறங்கேற்றிய கொடுஞ்செயல்!

September 5, 2022
rishi sunak liz trous
அரசியல்

இங்கிலாந்தின் பிரதமர் பதவிக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு! அடுத்த பிரதமர் யார்?

September 5, 2022
edappadi k palanisamy
அரசியல்

வ.உ.சி.யின் 151-வது பிறந்தநாளையொட்டி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்தம் படத்திற்கு மலர்தூவி மரியாதை!

September 5, 2022
hindu muslim vinayakar procession
தமிழ்நாடு

தூத்துக்குடியில் மதநல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் விநாயகர் ஊர்வலத்தைத் தொடங்கிவைத்த இஸ்லாமியர்கள்!

September 5, 2022
Next Post
"பிரபஞ்ச இருளின் ரகசியத்தை அறிய ஆவல்" – விண்ணில் பாய்ந்தது ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ்

"பிரபஞ்ச இருளின் ரகசியத்தை அறிய ஆவல்" - விண்ணில் பாய்ந்தது ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ்

Discussion about this post

அண்மை செய்திகள்

2022ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் – சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு!

2022ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் – சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு!

January 27, 2023
புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்!

புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்!

January 27, 2023
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது!

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது!

January 27, 2023
16 ஆண்டுகளுக்கு பிறகு பழநி முருகன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்..!

16 ஆண்டுகளுக்கு பிறகு பழநி முருகன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்..!

January 27, 2023
சிகரெட் பற்ற வைப்பதை குத்துவிளக்கு ஏற்றுவதுடன் ஒப்பிட்ட அமைச்சர் கே.என். நேரு!

சிகரெட் பற்ற வைப்பதை குத்துவிளக்கு ஏற்றுவதுடன் ஒப்பிட்ட அமைச்சர் கே.என். நேரு!

January 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist