ஏழுமலையான் கோவிலுக்கு புதிய அறங்காவலர் குழு தலைவராக சுப்பா ரெட்டி பதவி ஏற்றுப்பு

திருப்பதி எழுமலையான் கோவில் புதிய அறங்காவலர் குழுத் தலைவராக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் சுப்பா ரெட்டி பதவி ஏற்றுக்கொண்டார்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பேற்றுள்ள ஒய்.வி.சுப்பாரெட்டிக்கு, தேவஸ்தான செயல்
அலுவலர் அனில்குமார் சிங்கால் பதவிப்பிரமாணம் செய்த்கு வைத்தார். கருடாழ்வார் சன்னதி அருகே பதவிப்பிரமாணம் செய்து கொண்ட சுப்பா ரெட்டிக்கு, கோவிலில் உள்ள அனைத்து இடங்களையும் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் காண்பித்தார். மூலவர், உற்சவருக்கு அணிவிக்கப்படும் நகைகள் வைக்கக்கூடிய இடம், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, மடப்பள்ளி உள்ளிட்ட இடங்களை அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி சுற்றிப்பார்த்தார். சுப்பாரெட்டி ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் தாய்மாமா என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பதி தேவஸ்தான தலைவர் பொறுப்பு, கேபினட் அந்தஸ்து கொண்ட, செல்வாக்கு மிக்க பதவியாகும்.

Exit mobile version