குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் தேச ஒற்றுமையைக் குலைக்கும் சதித் திட்டம் -பிரதமர் மோடி

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாட்டில்  நடைபெறும் போராட்டங்கள் தேச ஒற்றுமையைக் குலைக்கும் சதித் திட்டம் என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

டெல்லியில் வரும் 8 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கர்கர்டோமா என்ற இடத்தில் நடந்த பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ஜாமியா, ஷாஹீன் பாக், சீலாம்பூர் உள்ளிட்ட இடங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டங்கள் தற்செயலாக நடந்ததவையா என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். நாட்டில் நல்லிணக்கத்தை அழிக்கும்பொருட்டு ஆம் ஆத்மி கட்சி மற்றும் காங்கிரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட போராட்டங்கள் என்று அவர் குற்றஞ்சாட்டினார். நடுத்தர குடும்பத்தினரின் நலனை கருத்தில் கொண்டு, வரி செலுத்வோர் பணத்தை சேமிக்கும் வகையில் வருமான வரிவிகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். வரி சேமிப்புக்காக எந்த திட்டத்திலும் முதலீடு செய்ய வேண்டிய அழுத்தம், புதிய முறையில் இல்லை என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். 2022-ம் ஆண்டுக்குள் மத்திய அரசு நாட்டில் உள்ள அனைத்து ஏழை மக்களுக்கும் தரமான வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் உறுதியளித்தார்

Exit mobile version