தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு

சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுட்டனர்.

தலைமைச் செயலகத்தில், மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டு, தலைமை செயலகத்திற்குள் வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் உரிய சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்பட்டன. மேலும், முதலமைச்சர், துணை முதலமைச்சர் இல்லங்கள் மற்றும் தலைமைச் செயலகம் போன்ற முக்கிய இடங்களுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்தவரைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version