தஞ்சை மாவட்டத்திற்கு பிப். 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை

பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெறுவதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பிப்ரவரி 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தஞ்சாவூரில் உள்ள பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெறுவதையொட்டி பிப்ரவரி 5ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் வகையில், பிப்ரவரி 22ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version