பொதுத்தேர்வில் வெற்றிபெற பெற்றோருக்கு பாதபூஜை

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற வேண்டி கோவை அருகே பள்ளி மாணவர்கள் தங்களின் பெற்றோருக்கு பாத பூஜை செய்து வழிபாடு செய்தனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள கல்லாரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறவும், நல்ல மதிப்பெண்கள் எடுக்கவும், தங்களின் பெற்றோர்களுக்கு திருவடி வழிபாடு நடத்தினர். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பன்னிரென்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் ஒருசேர அமரவைத்து பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் மற்றும் செஞ்சேரி ஆதினம் முத்துசிவராம சுவாமிகள் ஆகியோர் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.

Exit mobile version