தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: ரோஹித் ஷர்மாவின் சதத்தால் வலுப்பெற்ற இந்தியா

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், ரோஹித் ஷர்மாவின் அபார சதத்தால் இந்தியா வலுவான நிலையில் உள்ளது.

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 இருபது ஓவர் தொடர், 3 டெஸ்ட் தொடர் மற்றும் 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதலில் நடந்த இருபது ஓவர் தொடர் சமனில் முடிந்தது. அடுத்து தொடங்கிய டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டிகளிலும் இந்தியா அபார வெற்றி பெற்றுத் தொடரைக் கைப்பற்றியது. தொடரை முழுமையாக கைப்பற்ற விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், ஆறுதல் வெற்றி பெற டூ பிளிசிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணியும் தீவிரம் காட்டி வரும் நிலையில், 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, ராஞ்சியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரராக களம் இறங்கிய மயங்க் அகர்வால்,10 ரன்னிலும், இதனையடுத்து களம் இறங்கிய புஜாரா ரன் ஏதும் எடுக்காமலும் ரபடா பந்து வீச்சில், அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதனையடுத்து களம் இறங்கிய கேப்டன் கோலி 12 ஆட்டமிழந்தார். இதனையடுத்து நிலைத்து நின்று ஆடி சதமடித்த ரோஹித் ஷர்மா, நடப்பு தொடரில் 3 வது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

Exit mobile version