தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா நிதான ஆட்டம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், நிதானமாக விளையாடிய ரோகித் சர்மா அரைசதம் அடித்து அசத்தினார்.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதையடுத்து ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருபது ஓவர் மற்றும் ஒருநாள் போட்டியில் அதிரடி காட்டிய ரோகித் சர்மா, முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட அவர், நிதானமாக விளையாடி அரைசதத்தை பூர்த்தி செய்தார். மயங்க் அகர்வால், ரோகித் சர்மா ஜோடி தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை சிதறடித்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதனிடையே, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க அணியில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட முத்துசாமி என்பவர் விளையாடி வருகிறார்.

Exit mobile version