கடத்தல்காரர்களிடம் இருந்து நாட்டை பாதுகாக்க பயங்கரவாதத்திற்கு எதிரானது போல் ஒரு போர்

போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து நாட்டை பாதுகாக்க, பயங்கரவாதத்திற்கு எதிரானது போல் ஒரு போர் நடத்திய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அதிபர் மைத்ரிபால சிறிசேன கூறியுள்ளார்.

கொழும்புவில், போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அதிபர் மைத்ரிபால சிறிசேன, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தலையீடு மூலம் காவல்துறை உயரதிகாரிகள் இடமாற்றம் செய்வது தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறினார். அதிகாரிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தனிப்பட்ட முறையில் தம்மிடம் நேரடியாக தெரிவிக்கவும் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version