திருமணம் செய்ய இளம்பெண் மறுத்ததால், அவரை கத்தியால் குத்தி தானும் தற்கொலைக்கு முயன்றவர் கைது

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி, இளம்பெண் மறுத்ததால், அவரை கத்தியால் குத்தி தானும் தற்கொலைக்கு முயன்ற கொடூரன், காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்…

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் போதுரு மண்டலம் கவிதம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர். திருமணம் ஆன இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெனுகொண்டா எஸ்.வி.கே.பி கல்லூரியில் படிக்கும் தேஜஸ்வினி என்ற பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.

கல்லுரி மாணவியான தேஜஸ்வினி இடம் ஏற்கனவே திருமணமான சுதாகர் திருமணம் செய்து கொள்ளலாம் என வற்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் ஏற்கணவே திருமணமான உன்னை மீண்டும் நான் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என தேஜஸ்வினி மறுத்துவந்துள்ளார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை மதியம் தேஜஸ்வினியிடம் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி சுதாகர் மீண்டும் சண்டையிட்டிருக்கிறார்.

முதல் மனைவியை விவாகரத்து செய்து உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் வற்புறுத்தியுள்ளார். இதற்கு தேஜஸ்வினி எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து மறைத்து வைத்திருந்த கத்தியால் தேஜஸ்வினியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த தேஜஸ்வினி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். அங்கிருந்து தப்பியோடிய சுதாகர் தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயர்சிசெய்துள்ளார். உடம்பில் பல இடங்களில் வெட்டு காயங்களுடன் இருந்த தேஜஸ்வினியை பொதுமக்கள் பாலக் கொள்ளு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தற்போது அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version