தாய் மொழியின் மேன்மையை எடுத்துரைக்கும் விதமாக தமிழில் கையொப்பமிடும் முகாம்

பொதுமக்களிடையே தாய் மொழியின் மேன்மையை எடுத்துரைக்கும் விதமாக, தமிழில் கையொப்பமிடும் முகாம் சென்னை பள்ளிக்கரணை அருகே நடைபெற்றது.

சென்னை மேடவாக்கத்தில் தமிழரண் மாணவர்கள் சங்கம் சார்பில், தமிழில் கையெழுத்திடும் முகாம் நடைபெற்றது. பிறமொழி மோகத்தை குறைக்கும் வகையிலும், தாய்மொழி தமிழை அனைத்து சூழல்களிலும் பயன்படுத்த கோரியும், அதில் எப்போதும் கையெழுத்திட வலியுறுத்தியும், விழிப்புணர்வு கையெழுத்திடும் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறுவர்கள், இல்லத்தரசிகள், ஆண்கள், இளைஞர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், வாகனஓட்டிகள் என ஏராளமானோர் தானாக முன் வந்து, தமிழில் கையெழுத்திட்டனர். அப்போது, தாய்த்தமிழில் கையொப்பமிட உறுதியேற்போம் எனவும், தமிழின அடையாளத்தோடு தலைநிமிர்வோம் எனவும் விழிப்புணர்வு வாசகங்கள் சுற்றிலும் எழுதப்பட்டிருந்தன.

Exit mobile version