திமுகவிற்கு ஓட்டு போட மாட்டோம் என வீடுகளில் நோட்டீஸ்!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில், இந்துக்களை அவமதிக்கும் கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டோம் என்றும், ஓட்டு கேட்டு யாரும் வரவேண்டாம் எனவும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

இறுதிகட்ட பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், பழனி மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில், இந்து மதங்களை அவமதிக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஓட்டு கேட்டு வரவேண்டாம் என இந்து அமைப்பினர் சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
 

Exit mobile version