மோதலை உருவாக்கும் விதமாக டிக்டாக் செயலியில் வீடியோ: விசிக நிர்வாகி கைது

இரு தரப்பினர் இடையே மோதலை உருவாக்கும் விதமாக டிக்டாக் செயலியில் வீடியோ பதிவிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மணலூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். கூலித்தொழிலாளியான இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் நிர்வாகியாகவும் உள்ளார். இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர், ஒரு தரப்பினரை பற்றியும் , பெண்களைப் பற்றியும் தரக்குறைவாக பேசி, இரு தரப்பினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக பேசி, அதனை டிக்டாக் செயலியில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து மணிமாறன் என்பவர் விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை மேற்கொண்டு, வழக்குப் பதிந்த காவல்துறையினர், சிவக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Exit mobile version