முதலமைச்சருக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கடிதம்

இரண்டாவது தேசிய நீர் விருதுகளுக்கான, தகுதியான விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கடிதம் எழுதியுள்ளார்.

இரண்டாவது தேசிய நீர் விருதுகள் 16 பிரிவுகளின் கீழ் மத்திய அரசால் வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீர் சேமிப்பில் சிறந்த மாநிலம், சிறந்த மாவட்டம், சிறந்த மாநகராட்சி, சிறந்த கிராம பஞ்சாயத்து, சிறந்த பள்ளி, சிறந்த தொலைக்காட்சி என 16 பிரிவுகளில், நீர் சேமிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் அடிப்படையில், விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த நிலையில், இதற்கு தகுதியான விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு தமிழக முதலமைச்சருக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கடிதம் எழுதியுள்ளார்.

Exit mobile version