கொடநாடு வழக்கில் ஜாமினை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் மனுதாக்கல்

கொடநாடு வழக்கில் சயான், மனோஜ் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி, தமிழக அரசு சார்பில் உதகை மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.கொடநாடு வழக்கில் தொடர்ந்து அவதூறு பரப்பிக்கொண்டிருக்கும் சயான் மற்றும் மனோஜ் ஜாமினில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அரசுக்கு களங்கம் கற்பிக்க, பொய் பிரசாரம் செய்யும் சயான் மற்றும் மனோஜ் ஆகியோரின் ஜாமினை ரத்து செய்யக்கோரி, தமிழக அரசின் வழக்கறிஞர் சார்பில் இன்று உதகை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version