பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வு முகாம்

நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வு முகாம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வு முகாம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார். முகாமில் பொதுமக்கள் மற்றும் தங்களை சார்ந்தவர்களை எவ்வாறு பாதுகாப்பது குறித்து பேரிடர் மீட்பு வீரர்கள் பல்வேறு செயல் முறை விளக்கங்களை தத்ரூபமாக செய்து காண்பித்தனர். நிகழ்ச்சியில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version